ஒண்டே மேட்ச்னாலே கோஹ்லிதான் பெஸ்ட்!: கவாஸ்கர் புகழாரம்

புதுடெல்லி: கடந்த 10 ஆண்டுகளில் ஒருநாள் போட்டிகளில் கேப்டன் விராட் கோஹ்லிதான் இந்திய அணியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். குறிப்பாக இந்திய அணியின் சேஸிங்கில் கோலியின் நிலையான செயல்பாடுகள் அவரை சிறப்பாக ஆக்கியுள்ளது என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக கிரிக்கெட் கனெக்டட் நிகழ்ச்சிக்காக கவாஸ்கர் பேசியபோது கூறியதாவது:- ஒருநாள் போட்டிகளில் இதுவரை 43 சதங்களை விராட் கோஹ்லி பூர்த்தி செய்துள்ளார்.

அதில் 26 சதங்கள் சேஸிங்கில் அடிக்கப்பட்டவை ஆகும். இதன்மூலம் தனது அணியின் வெற்றிக்காக அவர் முன்னால் நிற்பது புலப்படுகிறது. மேலும் இந்த சேஸிங்கின்மூலம் அவரது நிலையான ஆட்டமும் வெளிப்படுகிறது. தனிநபராக இருந்து இந்திய அணியின் வெற்றித் தருணங்களில் அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதே நேரத்தில் விரோட்கோஹ்லியின் ரன் குவிப்பை மட்டும் நான் கருத்தில் கொள்ளவில்லை. இந்திய கிரிக்கெட்டில் 10 ஆண்டு காலமாக அவரது தாக்கம் சிறப்பானதாக உள்ளது. இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.

Related Stories: