அகமதாபாத்தில் பயங்கரம்; மேம்பால தூணில் பஸ் மோதி பிளந்தது

அகமதாபாத்: அகமதாபாத்தில் மேம்பால தூணில் பஸ் மோதி பிளந்தது. இதில் டிரைவர் உள்பட 2 பேர் காயமடைந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அகமதாபாத்தின் அக்பர்நகர் பகுதியில் ஒரு பஸ் சாலையில் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் டிரைவர் மற்றும் மேற்பார்வையாளர்கள் மட்டும் இருந்தனர். பயணிகள் யாரும் இல்லை. அப்போது, எதிர்பாராத விதமாக திடீரென பாலத்தின் தூண்களில் பஸ் பயங்கரமாக மோதி இரண்டாக பிளந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து மீட்பு குழுவினர் விரைந்து வந்து பஸ்சை மீட்டனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் விரைந்து வந்து பார்வையிட்டனர். இதுகுறித்து அகமதாபாத் பஸ் போக்குவரத்து அமைப்பின் அதிகாரி ஒருவர் கூறுகையில், விபத்து நடந்தபோது பயணிகள் பஸ்சில் யாரும் இல்லை. விபத்து நடந்த நேரத்தில் பஸ்சில் இருந்த பஸ்ஸின் டிரைவரும், மேற்பார்வையாளரும் காயமடைந்தனர். இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றார்.

Related Stories: