அகமதாபாத்: அகமதாபாத்தில் மேம்பால தூணில் பஸ் மோதி பிளந்தது. இதில் டிரைவர் உள்பட 2 பேர் காயமடைந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அகமதாபாத்தின் அக்பர்நகர் பகுதியில் ஒரு பஸ் சாலையில் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் டிரைவர் மற்றும் மேற்பார்வையாளர்கள் மட்டும் இருந்தனர். பயணிகள் யாரும் இல்லை. அப்போது, எதிர்பாராத விதமாக திடீரென பாலத்தின் தூண்களில் பஸ் பயங்கரமாக மோதி இரண்டாக பிளந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.