இத்தாலி: இத்தாலியின் புகழ்பெற்ற முன்னாள் கால்பந்து வீரர் பவுலோ ரோஸீ உடல் நலக்குறைவால் காலமானார். பவுலோ ரோஸீ நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். 1982 ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியின் நாயகன் என்று போற்றப்பட்டவர். அவர் செப்டம்பர் மாதம் 23-ம் தேதி இத்தாலியில் பிறந்துள்ளார். இவர் இத்தாலியில் கால்பந்து பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். அவர் உயிரிழந்த தகவலை அவரது மனைவி ஃபெடரிக்கா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பவுலோ உயிரிழந்ததற்கான காரணத்தை அவரது மனைவி தெரிவிக்கவில்லை.