கமுதி: கமுதி அருகே உள்ள தெருக்களில் ஓடும் கழிவுநீரால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கமுதி அருகே என்.கரிசல்குளம் கிராமத்தில் 300 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள தெருக்களில் கழிவுநீர் பல நாள்களாக தேங்கி துர்நாற்றறம் வீசுகிறது. இதுவரை எந்த தெருக்களிலும் சாலை, கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கப்பட வில்லை. தற்போது மழைக்காலம் என்பதால் மழைநீரோடு கழிவுநீரும் கலந்து தெருக்களில் தேங்கிக் கிடக்கிறது.