சென்னை: அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணை ஆணையத்தில் பல்கலை கழக பதிவாளர் ஆஜரானார். விசாரணை ஆணைய அதிகாரி கலையரசன் முன்பு பதிவாளர் கருணா மூர்த்தி ஆஜரானார். சூரப்பா மீதான புகார்கள் தொடர்பான ஆவணங்களுடன் பதிவளர் கருணாமூர்த்தி ஆஜரானார். நேற்று சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் பதிவளார் இன்று ஆஜரானார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான புகாரை விசாரிக்க சென்னை ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்டார். இதனையடுத்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மற்றும் பல்கலைக்கழகம் தொடர்பாக மேலும் புகார்கள் இருந்தால் அதனை தெரிவிக்கவும் தமிழக அரசு தரப்பில் மின்னஞ்சல் முகவரியும் அறிமுகப்பட்டிருந்தது.