திமுக மறியலில் அதிமுக கல்வீச்சுபோலீஸ் தடியடி

ராஜபாளையம்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நேற்று முன்தினம் இரவு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விமர்சித்து அவதூறாக பேட்டி அளித்தார். இதை கண்டித்து, விருதுநகர் மாவட்டம் முழுவதும் திமுகவினர், நேற்று  அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் உருவபொம்மையை எரித்து மறியல் போராட்டம் நடத்தினர். ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனை அருகே, அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் உருவபொம்மையை எரித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு வந்த அதிமுகவினர் சரமாரியாக திமுகவினர் மீது கற்களை வீசினர். கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இதில் 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவை சேர்ந்த 113 பேரும், அதிமுகவை சேர்ந்த 84 பேரும் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: