சென்னை: சென்னையில் புயல் பாதித்த குடிசை பகுதியில் வசிக்கும் 26 லட்சம் பேருக்கு இலவச உணவு வழங்கப்பட்டது. சென்னையில், தொடர் மழையால், 50க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. தாழ்வான மற்றும் குடிசை, புறநகர் பகுதிகளில் உள்ளவர்கள் தொடர் மழை காரணமாக, தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இதனால், உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு சிரமங்களை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து சென்னையில், வரும் 13ம் தேதி வரை குடிசை வாழ் மக்களுக்கு இலவச உணவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி அடையாறு அம்பேத்கர் நகரில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.