நெல்லை: பாளை மனகாவலம்பிள்ளை நகர் ஓடையில் காணப்படும் அடைப்புகள் காரணமாக மழை பெய்தால் அங்குள்ள குடியிருப்புகள் தண்ணீரில் மிதக்கும் அபாயத்தில் உள்ளன. பாளை பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் காரணமாக பல்வேறு இடங்களில் ஓடைகளில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. மூளிக்குளம் வாய்க்கால் தற்போது ஆக்கிரமிப்பு காரணமாக அடைப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள தண்ணீர் ராஜா குடியிருப்பு பகுதிகளில் உள்ள தெருக்களுக்கு செல்கிறது. பொதுமக்கள் தெருக்களில் தண்ணீருக்கு மத்தியில் நடந்து செல்ல வேண்டியதுள்ளது. இதேபோல் பாளை மனகாவலம்பிள்ளை ஓடையிலும் அதிகளவில் ஆக்கிரமிப்பு காணப்படுகிறது.