கோவா: 11 அணிகள் பங்கேற்றுள்ள 7வது ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. நேற்று மாலை நடந்த போட்டியில் ஜாம்ஷெட்பூர் எப்சி-ஒடிசா எப்சி அணிகள் மோதின. இந்த போட்டி 2-2 என டிராவில் முடிந்தது. தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு நடந்த 11வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.- கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்புடன் நடந்த இந்த போட்டியில் இரு அணிவீரர்களும் கோல்கள் அடிக்கவில்லை. இதனால் போட்டி டிராவில் முடிந்தது.