பழநி: அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். கொரோனா தடைக்கு பிறகு கோயில் திறக்கப்பட்டும் வின்ச் மற்றும் ரோப்கார் இயக்கப்படவில்லை. இதனால் மாற்றுத்திறனாளிகள், நடக்க இயலாதவர்கள் மலைக்கோயில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் 250 நாட்களுக்குப் பின் நாளை (டிச. 1) முதல் 50 சதவீதம் பேர் பயணிக்கும் வகையில் வின்ச் இயக்கப்பட உள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பழநி கோயில் செயல் அலுவலர் கிராந்திகுமார் பாடி கூறுகையில், ‘‘பக்தர்கள் வின்ச் மூலம் மேல் செல்லவும், இறங்கவும் ஆன்லைன் முறையில் மட்டுமே பதிவு செய்ய முடியும். எந்த டிக்கெட் கவுன்ட்டரும் திறக்கப்படாது.