சென்னை: அத்திப்பட்டு ரயில் நிலையத்தில் புதிய மின்னனு இன்டர் லாக்கிங் மற்றும் விஷுவல் டிஸ்பிளே யூனிட் தொழில்நுட்ப சேவையை தெற்கு ரயில்வேயின் சென்னை ரயில்வே கோட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிக்கை: தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தின் சென்னை சென்ட்ரல் - கூடூர் ரயில் மார்க்கத்தில் உள்ள அத்திப்பட்டு ரயில் நிலையத்தில் புதிய மின்னனு இன்டர்லாக்கிங் தொழில்நுட்ப சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் விஷுவல் டிஸ்ப்ளே யூனிட் என்ற புதிய கருவியும் அதே நாளில் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. மின்னனு இன்டர்லாக்கிங் என்பது சிக்னல் மற்றும் பாயிண்ட்கள் இடையே ஒரு கணினி மயமாக்கப்பட்ட கம்பியில்லா மென்பொருள் தொழில்நுட்பம் ஆகும்.