சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: நிவர் புயல் மற்றும் கன மழை காரணமாக இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து வருத்தமடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 4 லட்சம் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்தும், ரூபாய் 6 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்தும், ஆக மொத்தம் ரூபாய் 10 லட்சம் நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளேன். மேலும், இப்புயலின்போது 61 மாடுகளும், 5 எருதுகளும், 65 கன்றுகளும், 114 ஆடுகளும் உயிரிழந்துள்ளன. உயிரிழந்த மாடு ஒன்றுக்கு ரூபாய் 30,000, எருது ஒன்றுக்கு ரூபாய் 25,000, கன்று ஒன்றுக்கு ரூபாய் 16,000, ஆடு ஒன்றுக்கு ரூபாய் 3,000 வழங்கப்படும்.