சம்பல்: உத்தரப் பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு நடந்த சம்பவம், மனதை பிழிகிறது. சம்பவம் இதுதான்.இப்பகுதியில் விபத்தில் சிக்கி இறந்த சிறுமியின் உடல் ஸ்டெச்சரில் கிடத்தப்பட்டு, வெள்ளை நிற துணியால் மூடப்பட்டுள்ளது. அதன் அருகே யாருமில்லை. அப்போது, தெரு நாய் ஒன்று அங்கு வருகிறது. சிறுமியின் உடலை அது கொஞ்சம் கொஞ்சமாக கடித்து தின்கிறது. இதை அங்கிருந்த யாரோ ஒருவர் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.