நிவர் புயல் காரணமாக திருவள்ளூர் -ஆந்திர சாலை மூடப்பட்டுள்ளது

திருவள்ளூர்: நிவர் புயலால் ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக திருவள்ளூர் ஆந்திர சாலைகள்  மூடப்பட்டுள்ளது. ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். போக்குவரத்து நிறுத்தம் காரணமாக ஆந்திரா, ஊத்துக்கோட்டை செல்லும் மக்கள் அவதிபடுகின்றனர்.

Related Stories: