துரைப்பாக்கம்: மயான ஊழியரிடம் 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி துப்புரவு ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் ரஞ்சித் (44). இவர், சென்னை மாநகராட்சி சோழிங்கநல்லூர் மண்டலம் 196வது வார்டில் உள்ள ஈஞ்சம்பாக்கம் எரிவாயு தகன மேடையில் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்து வருகிறார்.இந்த மயானத்தில் 233 சடலங்களை தகனம் செய்தற்கான பணத்தை பெறுவதற்கு சோழிங்கநல்லூர் மண்டல அலுவலகத்தில் அண்மையில் ரசீதுகளை சமர்ப்பித்துள்ளார். அதை தணிக்கை செய்து பணம் வழங்குவதற்கு, அந்த வார்டின் துப்புரவு ஆய்வாளராக பணிபுரியும் விக்னேஷ்வரன் (31), 5 ஆயிரம் லஞ்சம் தரும்படி கேட்டுள்ளார்.