புதுடெல்லி: கொரோனா தொற்று காரணமாக கடந்த ஜூன் முதல் அக்டோபர் வரை 15 மாநிலங்களில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட 27 லோக் அதாலத் முகாம் மூலம் 2.51 லட்சம் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க மக்கள் நீதிமன்றம் எனப்படும் ‘லோக் அதாலத்’ முறையில் வழக்குகளுக்கு தீர்வு காணப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக லோக் அதாலத் முகாம் நேரடியாக நடத்தப்படாமல், காணொலி காட்சி முறையில் நடத்தப்பட்டது. இது ‘இ - லோக் அதாலத்’ என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் முதல் அக்டோபர் வரை 15 மாநிலங்களில் 27 ‘இ - லோக் அதலாத்’ முகாம் நடத்தப்பட்டது.