திருமலை: திருப்பதி அடுத்த திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நேற்று புஷ்பயாகம் நடந்தது. திருப்பதி தேவஸ்தான கோயில்களில் வருடாந்திர பிரமோற்சவம் முடிந்த பிறகு, 4 டன் மலர்களால் புஷ்ப யாகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, திருப்பதி அடுத்த திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நடைபெற்று வந்த வருடாந்திர பிரமோற்சவம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதையடுத்து, தாயாருக்கு புஷ்பயாகம் நேற்று நடந்தது. காலை ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர், யாகம் வளர்த்து தாயாருக்கு புஷ்பயாகம் விமரிசையாக நடந்தது.