துணிச்சலுக்கான அண்ணா பதக்கம்: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

காஞ்சிபுரம்: துணிச்சலுக்கான அண்ணா பதக்கம் பெற விரும்புவோர், விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு.2021ம் ஆண்டு குடியரசு தினத்தன்று உயிர், சொத்து போன்றவற்றை காப்பற்றுவதில் துணிச்சலான செயலை செய்த பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு துணிச்சலுக்கான அண்ணா பதக்கம், தமிழக முதல்வரால் வழங்கப்பட உள்ளது.

இதற்கான விண்ணப்ப படிவம்  //awards.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து உயிர், சொத்து போன்றவற்றைக் காப்பாற்றுவதில் துணிச்சலான செயல் செய்ததற்கான விவரத்தை ஆங்கிலம் மற்றும் தமிழில் விரிவான அறிக்கையை படிவத்துடன் பூர்த்தி செய்ய வேண்டும். இந்த விண்ணப்பப் படிவத்தை  அறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ரயில்வே ரோடு, காஞ்சிபுரம் என்ற முகவரியில் செயல்படும் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நாளை மதியம் 12 மணிக்குள் மூன்று நகல்களாக சமர்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 7401703481 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: