திண்டுக்கல்: திண்டுக்கல் ஒன்றியம், பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சிக்குட்பட்ட சிலுவத்தூர் சாலையில் உள்ளது கொள்ளம்புதூர் பகுதி பெரிய கண்மாய். இதனை தன்னார்வலர்கள் சமீபத்தில் தூர்வாரி, கரையோரம் முழுவதும் மரங்களை நட்டனர். இக்கண்மாயை சுற்றிலும் விவசாய நிலங்கள் உள்ளது. அதனால் ‘குளத்தை சுற்றிலும் விவசாய நிலங்கள் உள்ளன, அதனால் பாசன கண்மாயில் யாரும் குப்பை கொட்ட கூடா’ என ஊராட்சி சார்பில் போர்டு வைக்கப்பட்டுள்ளது.