சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., வெளியிட்டுள்ள அறிக்கை: ‘கடுகளவு கூட’ சட்ட அறிவு இல்லாத சி.வி.சண்முகம் எங்கள் தலைவரைப் பார்த்து ‘நுனிப்புல் மேய்பவர்’ என்று கூற என்ன அருகதை இருக்கிறது. எங்கள் தலைவரிடம் உள்ள நேர்மை கொஞ்சம் கூட அமைச்சருக்கு இல்லை. அதனால் தான் அவருக்கு ‘பொது ஊழியர்’ என்பதற்கும் அர்த்தம் தெரியவில்லை. ஓர் அமைச்சர், தன் கட்சி எம்எம்ஏவிற்கே டெண்டர் கொடுக்கலாமா, அரசு குவாரியைக் கொடுக்கலாமா என்ற அடிப்படையைத் தெரிந்து கொள்ளத் தனக்கும் சட்ட அறிவு கொஞ்சம் இருக்கிறது என்று நினைப்பாரேயானால் அந்த அறிவைக் கூட சி.வி.சண்முகம் பயன்படுத்திட முன்வரவில்லை. அந்த அளவிற்கு ஊழல் என்ற கனமழையில் இன்றைக்கு நனைந்து கொண்டிருக்கிறார்.