திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் மழைநீர் குடியிருப்பு பகுதிக்குள் சூழ்ந்ததால் பொதுமக்கள் வெளியே வரமுடியாத சூழலில் பாதுகாப்பு கருதி கயிறு கட்டி நடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 34 வது வார்டு ஜே ஜே நகர் பகுதியில் 300 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருந்து வருகின்றன. ஜே ஜே நகர் பகுதியில் இருந்து காசிபாளையம், நல்லூர் ஆகிய பகுதிகளுக்கு வர ஒரே ஒரு சாலை மட்டுமே உள்ள சூழ்நிலையில் ஏற்கனவே சபரி ஓடை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் அடிக்கடி ஓடை நீர் குடியிருப்பு பகுதிக்குள் சூழ்ந்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வந்த சூழ்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக ஓடை நீரோடு மழைநீரும் சேர்ந்து அப்பகுதியில் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழல் நிலவி வருகிறது.