பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் பலி: மயிலாடுதுறை அருகே சோகம்

தரங்கம்பாடி: தரங்கம்பாடி அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் கீழே விழுந்த கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தனர். கடலூர் மாவட்டம் பஞ்சாங்குப்பத்தை சேர்ந்த முமதுஅலி மகன் முகமதுஷகின் (19). பிஎஸ்சி 2ம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் மகன் ஹரிகரன் (20), திருஞானம் மகன் ஆகாஷ் (20). நண்பர்களான இவர்கள், நாகப்பட்டினத்தில் நடைபெற்ற நண்பர் வீட்டு நிகழ்ச்சிக்கு நேற்று முன்தினம் சென்று இருந்தனர்.

பின்னர் நேற்று காலை கடலூருக்கு ஒரே பைக்கில் திரும்பி கொண்டிருந்தனர். தரங்கம்பாடி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது அவர்களுக்கு முன்னே சென்ற தரங்கம்பாடியை சேர்ந்த தர் (50) என்பவர் பைக் மீது மோதி நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது எதிரே வந்த டிராக்டர் 3 பேர் மீது ஏறி இறங்கியது. இதில் 3 பேரும் தலை நசுங்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த தர் பொறையார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து பொறையார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் பலி: மயிலாடுதுறை அருகே சோகம் appeared first on Dinakaran.

Related Stories: