பெங்களூரு: காயம் காரணமாக கடந்த தொடர்களிலிருந்து வெளியேறிய பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா, தனது உடல்தகுதியை நிரூபிக்க தற்போது என்சிஏவில் தொடர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த ரஞ்சி கோப்பை தொடரின்போது காயம் பட்ட இஷாந்த் சர்மா தொடர்ந்து நியூசிலாந்து தொடர் மற்றும் ஐபிஎல் தொடர்களில் முழுமையாக பங்கேற்க முடியாமல் அவதிப்பட்டு இடையிலேயே திரும்பினார். இந்நிலையில் ஆஸ்திரேலியா தொடரிலும் காயம் காரணமாக அவரது பெயர் இடம்பெறாமல் உள்ளது. இதனால் தனது பிட்னசை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இஷாந்த் சர்மாவிற்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆஸி.யில் நடைபெறும் டெஸ்ட் தொடரின் முதல் பகலிரவு போட்டியில் மட்டும் பங்கேற்கும் கேப்டன் விராட் கோலி தனது குழந்தை பிறப்பையொட்டி நாடு திரும்பவுள்ளார்.