புதுடெல்லி: கிரிமினல் குற்ற வழக்கில் தண்டிக்கப்படும் அரசியல்வாதிகள், தண்டனை முடிந்து 6 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டால் அவர்கள் எம்.எல்.ஏ மற்றும் அமைச்சராக கூட பதவி வகிக்க முடியும் என்பதால் அப்படிப்பட்டவர்கள் தேர்தலில் நிற்க வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஒருசில வழிகாட்டுதல்களை வழங்கியது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக புதிய பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெறுவது மட்டுமில்லாமல் அதுதொடர்பாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து ஒரு வருடம் ஆனவர்கள் மற்றும் அதேப்போன்று 5 ஆண்டுகாலம் சிறை தண்டனை பெற்ற நபர்களும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நாடாளுமன்றத்திற்கு உத்தரவிட வேண்டும்‘ என குறிப்பிடப்பட்டது.