திருவனந்தபுரம்: கேரள தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக எழுந்த புகாரையடுத்து, மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரிடம் மத்திய அமலாக்கத்துறை, சுங்க இலாகா, என்ஐஏ ஆகிய அமைப்புகள் சுமார் 100 மணிநேரத்துக்கும் மேல் விசாரணை நடத்தின. இதையடுத்து சிவசங்கர் கைது செய்யப்பட்டார். தற்போது 14 நாட்கள் நீதிமன்ற காவலில் எர்ணாகுளம் காக்கநாடு சிறையில் உள்ளார். இதற்கிடையே சொப்னாவின் லாக்கரில் கிடைத்த ₹1 கோடி பணம் லைப் மிஷன் திட்டத்தில் சிவசங்கருக்கு கொடுக்கப்பட்ட கமிஷன் தொகை என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக சிவசங்கரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் நேற்று மீண்டும் விசாரணை நடத்தினர்.