மதுரை: தீபாவளி பண்டிகைக்கு ரூ.103 கோடி அளவுக்கு மதுபானம் விற்பனையாகி, மதுரை மண்டலம், தமிழகத்தில் முதலிடம் பிடித்துள்ளது. பண்டிகை காலங்களில் அதிகளவில் மது விற்க தமிழகத்தில் ரூ.320 கோடிக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. குடவுன்களில் இருந்து லாரிகள் மூலம் மதுபான சரக்குகள் அந்தந்த கடைகளுக்கு இரு தினங்களுக்கு முன்பே கொண்டு செல்லப்பட்டது. தீபாவளி தினத்தில் மதுரை மண்டலத்தில் மதுபானம் சுமார் ரூ.103 கோடிக்கு விற்பனையானது. சென்னை மண்டலத்தில் ரூ.94 கோடிக்கும், திருச்சி ரூ.95 கோடிக்கும், சேலம் ரூ.87 கோடிக்கும், கோவையில் ரூ.84 கோடிக்கும் சரக்கு விற்பனையானது.