வாஷிங்டன்: காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி பதற்றமானவர் என்றும், அறியப்படாத குணம் கொண்டவர் என்றும் அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார். அமெரிக்கா முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, The Promised Land என்ற பெயரில் தனது அரசியல் நினைவு குறிப்பை வெளியிட்டிருக்கிறார். அதில் இந்திய தலைவர்கள் உட்பட பல்வேறு நாட்டு தலைவர்களை பற்றி அவர் குறிப்பிட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. தொடர்ந்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பதற்றமானவர் என்றும் அறியப்படாத குணம் பெற்றவர் என்றும் ஒபாமா குறிப்பிட்டுள்ளதாக அந்த பத்திரிக்கை தெரிவித்துள்ளது. ஆசிரியரை கவுரவிக்க விரும்பும் மாணவராகவும், அதே நேரத்தில் கவனத்தை ஈர்க்க தெரியாதவராகவும் ராகுல்காந்தி இருப்பதாக ஒபாமா தெரிவித்துள்ளார்.