டெல்லி : மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்களின் பெயர்களை பாகிஸ்தான் மூடி மறைத்து விட்டதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. பாகிஸ்தானில் தேடப்படும் தீவிரவாதிகள் பட்டியலை அந்நாட்டின் மத்திய உயர்மட்ட விசாரணை ஹபீஸ் சையத், ஜெய்ஷ்-இ- முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் ஆகியோரின் பெயர்கள் இடம் பெறவில்லை. இது குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ள வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா, மும்பை தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவர்கள் சதி திட்டத்தை தீட்டியவர்களின் பெயர் விடுப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பாகிஸ்தான் அதனை வேண்டும் என்றே தவிர்த்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.