வீரராகவர் கோயிலில் அமாவாசை தரிசனம் ரத்து

திருவள்ளூர்: திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோயில் கவுரவ ஏஜென்ட் சி.சி.சம்பத் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா தொற்றுக்காரணமாக அரசாங்க பரிந்துரைப்படி, திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோயில் சார்பாக அமாவாசையை முன்னிட்டு வரும் 13ம் தேதி மதியம் 12 மணி முதல் 14ம் தேதி இரவு வரை சேவார்த்திகள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே சேவார்த்திகள் யாரும் வருகை தர வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: