காரைக்குடி: பிஇ நேரடி இரண்டாம் ஆண்டு கவுன்சலிங்கில் 81,042 இடங்களுக்கு ெவறும் 7,014 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். 74,028 இடங்கள் காலியாக உள்ளன. தமிழகத்தில் பிஇ நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு 453 அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 81 ஆயிரத்து 42 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இந்த ஆண்டு 10,655 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 8,023 விண்ணப்பங்கள் தகுதியானவையாக இருந்தன. இவர்களுக்கான ஆன்லைன் கவுன்சலிங் அக். 27ல் துவங்கி கடந்த 7ம் தேதி முடிந்தது. விண்ணப்பித்தவர்களில் 1,169 பேர் ஆப்சன்ட் ஆகினர்.