ஸ்ரீபெரும்புதூர்: தாம்பரம் அருகே நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் அபிஷேக் (22). சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 30ம் தேதி இரவு, குன்றத்தூர் அருகே தர்காஸ் பகுதியில் இவரது உறவினர் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அதில் கலந்து கொண்டு அபிஷேக் வீட்டுக்கு புறப்பட்டார். மண்டபத்தில் இருந்து சிறிது தூரம், பைக்கில் வந்த மர்மநபர்கள், திடீரென அபிஷேக்கை மறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பினர். புகாரின்படி சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து26 பேரிடம் தீவிரமாக விசாரித்து வந்தனர்.