செங்கல்பட்டு அருகே இன்சூரன்ஸ் பணத்துக்காக நண்பனை கொன்றுவிட்டு நாடகமாடியவர் கைது..!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே அல்லானூர் பகுதியில் இன்சூரன்ஸ் பணத்துக்காக நண்பனை கொன்றுவிட்டு நாடகமாடியவர் கைது செய்யப்பட்டார். 2023 செப்.16-ல் அல்லானூரில் குடிசை எரிந்து உடல் கருகி ஒருவர் உயிரிழந்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்சூரன்ஸ் பணத்துக்காக நண்பனையே எரித்துக் கொன்றுவிட்டு நாடகமாடியது போலிஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. தனது நண்பனை எரித்துக் கொன்றுவிட்டு நாடகமாடிய சுரேஷ், அரிகிருஷ்ணன், கீர்த்திராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

The post செங்கல்பட்டு அருகே இன்சூரன்ஸ் பணத்துக்காக நண்பனை கொன்றுவிட்டு நாடகமாடியவர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: