மதுரை: துபாயில் நடைபெற உள்ள மாற்றுத் திறனாளி கிரிக்கெட் தொடரில் நிதி பற்றாக்குறை காரணமாக கலந்துகொள்ள வழியின்றி தமிழக வீரர்கள் தவித்து வருகின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்காக வரும் 27-ம் தேதி முதல் அடுத்த மாதம் 3-ம் தேதி வரை துபாயில் நடக்க உள்ள டிபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சென்னை, மும்பை டெல்லி, கொல்கத்தா, ராஜஸ்தான் என 5 அணிகள் விளையாட உள்ளன. சென்னை சூப்பர் ஸ்டார் அணிக்கு தமிழகத்தை சேர்ந்த 15 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வீரர்களுக்கு பயிற்சிக்கும் பேட் உள்ளிட்ட உபகாரங்கள் வாங்கவும் மாவட்ட நிர்வாகங்கள் நிதியுதவி அளித்து வருகின்றன.