மழையில் வீடு இடிந்து நாதஸ்வர கலைஞர் பரிதாப பலி

அவனியாபுரம்: மதுரை அவனியாபுரம் அருகே செம்பூரணியை சேர்ந்தவர் மூக்கையா (55). நாதஸ்வர கலைஞர். திருமணமாகாதவர். மண் குடிசையில்  தனியாக வசித்து வந்தார். கடந்த 31ம் தேதி இரவு இப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதில் மூக்கையா வீட்டு சுவர் இடிந்து விழுந்தது.  இடிபாடுகளில் சிக்கி அவர் உயிரிழந்தார். ஆனால், அவர் வெளியூர் சென்றிருக்கலாம் என்ற எண்ணத்தில் யாரும் தேடவில்லை.  நேற்று காலை  துர்நாற்றம் வீசவே அக்கம்பக்கத்தினர், பார்த்தபோது, உடல் அழுகிய நிலையில் மூக்கையா இறந்து கிடந்தது தெரிந்தது. தகவலின் பேரில்,  அவனியாபுரம் போலீசார் வந்து, மூக்கையா உடலை மீட்டனர்.     

Related Stories: