டெல்லி: கொரோனா வைரஸ் பரவலால் நாட்டில் 96% பேருக்கு கடும் மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனாவில் தொடங்கி உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கோவிட்-19 தொற்று இந்தியாவிலும் பரவி அதன் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒரு சில இடங்களில் நோய் தொற்று குறைந்துள்ள நிலையில் நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 38,310 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 82,67,623-ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 1,23,097 பேர் உயிரிழந்த நிலையில் 76,03,121 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.