புதுடெல்லி: கொரோனா தொற்று சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர், பெவிபிரவிர் மருந்துகள் ஒப்புதல் இல்லாமல் பயன்படுத்தப்படுகிறதா? என்பதற்கு, மத்திய அரசு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் நோய் எதிர்ப்பு மருந்துகளான ரெம்டெசிவிர், பெவிபிரவிரின் செயல்திறன் குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆலோசித்து வருகின்றனர். இந்நிலையில், வக்கீல் எம்.எல். சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஒப்புதல் இல்லாமல் ரெம்டெசிவிர், பெவிபர்விர் மருந்துகள் பயன்படுத்தப்படுவதாக கூறியுள்ளார்.