நெமிலி: நெமிலி பேரூராட்சி காவேரிபுரம் பகுதிக்கு செல்லும் சாலையோரம் பேரூராட்சிக்கு சொந்தமான பழமைவாய்ந்த கிணறு உள்ளது. தடுப்பு சுவரின்றி காணப்படும் இந்த கிணறு, காவேரிபுரம் கிராமம், நெமிலி பேரூராட்சி மற்றும் சுற்றுவட்டார மக்களுக்கு குடிநீர் வழங்கும் கிணறாக பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் தண்ணீர் வற்றியதால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்பின்றி காணப்படுகிறது. இவ்வழியாக செல்லும் வாகனங்கள் கிணற்றில் விழும் ஆபத்தான நிலை உள்ளது. இதனால் நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகள் கடும் அச்சமடைந்துள்ளனர்.