நொய்டா:இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படை (ஐடிபிபி), லடாக் பகுதியில் உள்ள கரகோரம் கணவாய் முதல் அருணாசலப் பிரதேசம் ஜசிப் லா என்ற பகுதி வரையிலான 3,488 கி.மீ இந்திய-சீன எல்லையை பாதுகாக்கிறது. இப்படை 1962ம் ஆண்டு, அக்டோபர் 24ல் மத்திய சேமக் காவல் படைச் சட்டம் மூலமாக உருவாக்கப்பட்டது. இதன், 59வது ஆண்டு நிறுவன தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதில், மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி கலந்து கொண்டு பேசியதாவது: எதிரி நாடு எப்போது, எங்கு தலையை உயர்த்தும் என்பதை உற்று நோக்கி, பதிலடி கொடுக்க நாம் தயார்நிலையில் இருக்க வேண்டும்.