7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் தர கோரி ஆளுநர் மாளிகை முன் இன்று திமுக ஆர்ப்பாட்டம்

சென்னை: 7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் தர கோரி ஆளுநர் மாளிகை முன் இன்று திமுக ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை முன் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலை 10 மணிக்கு திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். ஆளுநருக்கு அரசியல் ரீதியாக அழுத்தம் தர அதிமுக அரசு தவறியதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஒரு மாதம் முடிந்த நிலையில் மேலும் 4 வாரம் அவகாசம் கோருவது மசோதாவை நீர்த்துப்போக செய்வதாக புகார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: