பாரிஸ்: பாகிஸ்தானை அடுத்தாண்டு பிப்ரவரி வரையில் சாம்பல் பட்டியலில் வைத்திருக்க, நிதி நடவடிக்கை பணிக்குழு முடிவு செய்துள்ளது. தீவிரவாதத்தை ஊக்குவித்தல், நிதி மோசடிகளில் ஈடுபடுதல் போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நாடுகளை, ‘நிதி நடவடிக்கை பணிக்குழு’ என்ற சர்வதேச அமைப்பு கண்காணித்து வருகிறது. அதன்படி, தீவிரவாத அமைப்புகளை ஊக்குவித்து, அவற்றுக்கு நிதியுதவி செய்து வரும் பாகிஸ்தானை இக்குழு, சர்வதேச தடைக்கான சாம்பல் நிற பட்டியலில், கடந்த 2018ல் சேர்த்தது. இதில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றால், 27 நிபந்தனைகளை நிறைவேற்றும்படி பாகிஸ்தானுக்கு உத்தரவிட்டது. ஆனால், இதுவரையில் 21 நிபந்தனைகளை மட்டுமே நிறைவேற்றியுள்ள பாகிஸ்தான், தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி அளிப்பதை நிறுத்துவதற்கான 6 நிபந்தனைகளை நிறைவேற்றவில்லை.