சென்னை: மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்காத தமிழக ஆளுநரை கண்டித்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோரை போலீசார் ைகது செய்தனர். மருத்துவ கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்குவதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வேண்டும் என்றே காலம் தாழ்த்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆளுநரின் இந்த செயல்பாட்டை கண்டித்து, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்ட தலைவர் குமரன் தலைமையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நேற்று காலை கிண்டியில் உள்ள வேளச்சேரி நெடுஞ்சாலையில் நடந்தது. போராட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.