விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில், 3 பெண்கள் உட்பட 5பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது: மு.க ஸ்டாலின் இரங்கல்

சென்னை: விருதுநகர் எரிச்சநத்தம் பட்டாசு ஆலை வெடிவிபத்தில், 3 பெண்கள் உட்பட 5பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழப்புக்கு அதிக நிதி, காயமடைந்தோருக்கு உயர்சிகிச்சை அவசியம் எனவும், தீபாவளிக் காலத்தில் பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பை  அரசு உறுதி செய்திட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories: