தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா தொடர்பான விசாரணைக்கு ஆஜராக அமேசான் மறுப்பு!

டெல்லி: தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா தொடர்பான விசாரணைக்கு ஆஜராக அமேசான் மறுப்பு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணைக்கு ஆஜராக அமேசான் மறுப்பு தெரிவித்துள்ளதாக பாஜக எம்.பி. மீனாட்சி லேகி தெரிவித்துள்ளார். மேலும் விசாரணைக்கு ஆஜராக அமேசான் மறுத்திருப்பது உரிமை மீறல் பிரச்சனையாகும் என மீனாட்சி லேகி தெரிவித்தார். பேஸ்புக் நிறுவனம் விசாரணைக்கு ஆஜராகியுள்ளது. கூகுள், பே.டி.எம் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: