இந்தியாவின் ஒற்றுமையையும் வலிமையையும் பிரதிபலிக்கும் பண்டிகை துர்கா பூஜை: பிரதமர் மோடி உரை

டெல்லி: துர்கா  பூஜைவின் திருவிழா இந்தியாவின் ஒற்றுமையையும் வலிமையையும் பிரதிபலிக்கும் பண்டிகை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். துர்கா  பூஜை 2020 கொண்டாட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மேற்கு வங்காள மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்க பிரதமர் நரேந்திர மோடி பெங்காலி மொழியில் பேசினார். இது வங்காளத்திலிருந்து வரும் மரபுகள் மற்றும் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாகும். மேற்கு வங்க மாநிலத்தின் விரைவான வளர்ச்சிக்காக நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். பிரதான் மந்திரி அவாஸ் யோஜனாவின் கீழ் சுமார் 30 லட்சம் ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டப்பட்டுள்ளன. பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனாவின் கீழ் 90 லட்சத்திற்கும் அதிகமான இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

Related Stories: