திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய அலுவலகத்தில், மாதிரி தொழில்நெறி வழிகாட்டு மையத்தினை கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது, “தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் தனியார் துறையில் பதிவுதாரர்கள் பணி நியமனம் பெறுவதற்கும், வேலையளிப்பவர்கள் தங்களுடைய நிறுவனங்களுக்கு தகுதியான ஆட்களை தேர்வு செய்வதற்கும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தினை உருவாக்கி உள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் www.tnvelaivaippu.gov.in என்ற இணையதளத்தில் புதிய பதிவு, புதுப்பித்தல், கூடுதல் பதிவு, முகவரி மாற்றம் ஆகியவற்றையும், பதிவுதாரர்கள் www.tncarrerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் போட்டித் தேர்வுகளுக்கான பாடக்குறிப்புகள், மாதிரி வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம்.