பெங்களூரு: ‘இடைத்தேர்தல் முடிவு வெளியான பிறகு எந்த நேரத்திலும் முதல்வர் எடியூரப்பா முதல்வர் பதவியில் இருந்து மாற்றப்படுவார்’ என்று பா.ஜ. எம்.எல்.ஏ. பசவனகவுடாபாட்டீல் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநில முதல்வராக உள்ள எடியூரப்பாவை மாற்ற வேண்டும் என்று பாஜ கட்சியினர் கட்சி மேலிடத்தில் கோரிக்கை வைத்து வருவதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. இந்நிலையில், முதல்வர் எடியூரப்பா நீண்ட நாட்கள் முதல்வர் பதவியில் நீடிக்க மாட்டார் விரைவில் மாற்றப்படுவார் என்று பாஜ எம்எல்ஏ பசவனகவுடா பாட்டீல் எத்னால் கூறியுள்ளார்.
விஜயபுரா நகரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் பேசுகையில், ‘‘முதல்வர் எடியூரப்பா அதிக நாட்கள் முதல்வர் பதவியில் நீடிக்கமாட்டார். அவருக்கு இதற்கு மேலும் இடம் கொடுக்க முடியாது என்று மேலிடம் கருதுகிறது.