ஜெய்ப்பூர்: தேசிய தேர்வு முகமை வெளியிட்ட நீட் தேர்வு முடிவில் எஸ்டி பிரிவில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்ற மாணவர் தோல்வி அடைந்ததாக குளறுபடி நடந்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம், சவாய் மதோப்பூர் மாவட்டத்தில் உள்ள கங்காபூரை சேர்ந்தவர் மிருதுல் ராவத் (17). இவர் நீட் தேர்வில் 720க்கு 329 மதிப்பெண் பெற்றதாக தேர்வு முடிவு வெளியானது. இதனால் அதிக மதிப்பெண்ணை எதிர்பார்த்த மிருதுல் அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் மறுமதிப்பீடு செய்யக்கோரி தேசிய தேர்வு முகமையிடம் விண்ணப்பித்தார். மறுமதிப்பீடு செய்த பின்னர் அவர் 720க்கு 650 மதிப்பெண்கள் பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டது.