கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த அதிக பஸ்களை இயக்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: பேருந்தில் பெரும்பாலான பயணிகள் முகக்கவசமே இல்லாமலும், எந்தவித சமூக இடைவெளியும் இல்லாமலும் பயணிக்கும் அவலநிலை தொடர்கிறது. இந்நிலை நீடித்தால் கொரோனாவை கட்டுப்படுத்தும் அனைத்து முயற்சிகளும் தோல்விதான் அடையும். தமிழகத்தில் குளிர் காலம் தொடங்க இருக்கிறது. பல்வேறு அயல் நாடுகளில் குளிர்காலத்தில்தான் கொரோனா தொற்று அதிகமாக பரவியது. சமூக இடைவெளியை அவசியம் கடைபிடிக்க வேண்டும். தமிழக அரசு, அதிக பேருந்துகளை இயக்குவதன் மூலம், குறைந்த அளவில் பயணிகளை பயணிக்க அனுமதிப்பதின் மூலம் ஏற்பட இருக்கும் ஆபத்தில் இருந்து அனைவரையும் காக்க முடியும். இதை தமிழக அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

Related Stories: