குன்னூர்: நீலகிரி மாவட்டம் 60 சதவிகிதம் அடர்ந்த வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும். இங்குள்ள வனப்பகுதியில் பல்வேறு வன விலங்குகள் மற்றும் பறவைகள் வாழ்கின்றன. இது மட்டுமின்றி மலைப்பாம்பு, ராஜ நாகம், கட்டுவிரியன் உள்ளிட்ட பல்வேறு வகையான பாம்புகள் உள்ளன. அவற்றில் சில சாலையை கடக்கும் போது வாகனங்களில் அடிபட்டு இறந்து விடுகிறது. இந்நிலையில் குன்னூர் மலைப்பாதையில் மரப்பாலம் பகுதியில் சாலையோரத்தில் அரிய கொடிய விஷமுள்ள பாம்புகளின் வகையை சேர்ந்த மலபார் பிட் வைப்பர் பாம்பு ஒன்று சாலையை கடக்க முடியாமல் தவித்து வந்தது.