தமிழகத்தில் நவ.26ல் பொது வேலைநிறுத்தம் தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் வரும் நவம்பர் 26ம் தேதி பொதுவேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:தமிழ்நாட்டில் இயங்கும் மத்திய, மாநில தோன்று சங்கங்களின் கலந்தாய்வுக் கூட்டம் கடந்த 17ம் தேதி நடந்தது. மத்திய தொழிற்சங்கங்களின் அறிவிப்பின்படி தமிழகத்தில் நவம்பர் 26ம் தேதி பொதுவேலை நிறுத்தத்தை நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதில், வருமான வரி கட்டும் அளவுக்கு வருவாய் இல்லாத அனைத்து குடும்பங்களுக்கும், மாதம் 7500 வீதம் நிவாரண தொகை வழங்க வேண்டும்  என்பது உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தப்படுகிறது.     

Related Stories: